![Screenshot_2024-01-20-07-43-42-99_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-20-07-43-42-99_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x431.webp)
விருந்தாளியாக வீட்டுக்கு வந்துள்ளனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ராமமூர்த்தி கோபி மற்றும் இனிய நண்பர்கள் மூவரும் கோர்ட்டுக்கு போனவர்கள் இன்னும் வரவில்லை என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-20-07-44-39-35_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
ஒரு போன் கூட பண்ண மாட்டாங்களா என்று கோபி புலம்பி கொண்டிருக்க ராமமூர்த்தி பாக்கியா போன் பண்ணா வந்துட்டு இருக்காங்களாம் என்று சொல்ல பாக்யா வீட்டுக்கு வந்து விட கோர்ட்டில் நடந்தது என்ன என்று கேட்க கவுன்சிலிங் போக சொல்லி இருக்காங்க என கூறுகிறார். அதன் பிறகு கோபி செழியன் எங்கே ஓகே தானே என்று கேட்க அவன் வெளியே போய் இருப்பதாக சொல்கிறார்.
அதனைத் தொடர்ந்து பாக்யா அமைச்சராக இருந்து போன் வந்ததும் பிறகு அங்கு போன பிறகு கேட்டரிங் ஆர்டர் கொடுத்த விஷயத்தையும் சொல்ல ராமமூர்த்தி சந்தோஷப்பட இனியா உன்னை நினைச்சா பெருமையா இருக்குமா நீ ஏதாவது சாதித்துக் கொண்டே இருக்க என வாழ்த்து கூறுகிறார்.
இங்கே ஜோசப் வரும் திங்கட்கிழமை குழந்தைக்கு பேட்ரிசம், பாதர் கிட்ட பேசிட்டு எல்லாம் ஏற்பாடுகளையும் நான் பண்ணிட்டு இருக்கேன் என்று சொல்ல மரியம் ஓகே சொல்ல ஜெனி செழியன் கிட்டயும் அந்த குடும்பத்துக்கிட்டையும் பேச வேண்டாமா என்று கேட்க அவங்க யாரும் இதில் கலந்து கொள்ள கூடாது என ஜோசப் உறுதியாக கூறி விடுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-20-07-43-12-22_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
அடுத்து பாக்கியா தன்னிடம் வேலை செய்பவர்களை கூப்பிட்டு அமைச்சர் கேட்டரிங் ஆர்டர் கொடுத்த விஷயத்தை கூறுகிறார். அதன் பிறகு ரெஸ்டாரன்ட் ஆரம்பிக்கலாம் எனவும் வேலைக்கு யாராவது ஆள் இருந்தால் சொல்லுங்கள் எனவும் சொல்கிறார். இது எல்லாம் கேட்டு கோபி கடுப்பாகி உள்ளே சென்று விடுகிறார்.
அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்திலிருந்து வடிவும் அவருடைய கணவரும் வந்து ராஜுவின் கல்யாணத்திற்காக பத்திரிக்கை வைக்கின்றனர். ராதிகாவின் சித்தப்பா பையன் தான் வடிவுவின் கணவர் என அறிமுகமாகிறார். ராதிகா ஒவ்வொருத்தரையாக அறிமுகம் செய்து வைக்க பாக்யாவை என்னவென்று அறிமுகம் செய்து வைப்பது என தெரியாமல் நிற்க ராமமூர்த்தி அவ என்னுடைய பொண்ணு என கூறுகிறார்.
பிறகு இவர்கள் கிளம்பிச் செல்ல பக்கத்து வீட்டுப் பெண் ஒருவர் பணியாரம் கொண்டு வந்து கொடுத்து ஜெனிக்கும் செழியனுக்கும் பிரச்சனை என்று கேட்க வீட்டில் இருப்பார்கள் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சமாளிக்க சர்ச்சில் குழந்தைக்கு பெயர் வைக்கப் போறதா சொன்னாங்க ஆனா அங்க உங்க குடும்பத்தார் பேரையும் செழியன் பேரையோ சொல்லல, ஜெனி தெரியும் அவங்க அப்பா தெரியும் குழந்தை பிறந்து தான் சொன்னாங்க என்று குழந்தையோட பெயரை சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். செழியன் ஜெனியோட வாழ்க்கையில் தான் நான் வேணான்னு முடிவு பண்ணிட்டாங்க குழந்தையோட வாழ்க்கையில் இருக்கக் கூடாதா என வருத்தப்படுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/01/Screenshot_2024-01-20-07-44-11-65_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
ஈஸ்வரி இதை இப்படியே விடக்கூடாது என கோபப்பட்டு ஜெனி வீட்டுக்கு கிளம்ப ராமமூர்த்தி தேவையில்லாமல் கோபப்பட்டு பிரச்சனை பெருசாக்க வேண்டாம் என தடுத்து நிறுத்துகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.