செழியனை அடித்து வெளியே தள்ளியுள்ளார் ஜோசப்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ராதிகா கிச்சனில் பாக்கியவிடம் கடுகு கேட்க பாக்கியா கடுகு எடுத்து கொடுக்க புருஷனை ஏன் விட்டுக் கொடுங்கள் கடுகு கொடுக்க மாட்டேனு கேட்கறீங்களா என்று ராதிகா கேட்க பாக்யா என் வாழ்க்கையில நடந்து முடிந்ததை நான் ஒரு நாளும் இந்த கடுகளவு கூட நினைக்கிறது இல்ல என சொல்கிறார்.
இதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி ஜோசப் சொன்ன விஷயத்தை சொல்ல இதைக் கேட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சி அடைய செழியன் கோபமாக வண்டியை எடுத்துக் கொண்டு ஜெனியை பார்க்க வருகிறார். ஜெனியையும் குழந்தையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என செழியன் பேச ஜோசப் அவரை அடித்து வெளியே துரத்துகிறார். ஜெனியும் மரியமும் இருவரும் ஜோசப்பை தடுக்க விடாமல் செழியனை அடித்து வெளியே தள்ளுகிறார்.
வீட்டில் செழியனை காணாமல் எல்லோரும் பதற பாக்கியம் எழிலுக்கு போன் போட்டு செழியனை பார்க்க சொல்ல எழில் செழியனை தேடிவந்து ஆறுதல் சொல்கிறார். செழியன் ஜெனிக்கு எப்படியாவது இன்னொரு கல்யாணம் பண்ணலாம் என்று கோபப்பட அந்த ஆள் கிட்ட நான் பேசுவேன் என எழில் கூறுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.