பழனிச்சாமியை பாக்கியா புலம்ப விட ஈஸ்வரிக்கு எழில் பதிலடி கொடுத்துள்ளார். 

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அமிர்தாவின் அம்மா அமிர்தாவுக்கும் குழந்தை பெத்துக்க ஆசை இருக்கு ஆனா மாப்பிள்ளை தம்பி தான் இப்ப வேணாம்னு சொல்றதா சொல்றாரு என்று சொல்ல ஈஸ்வரி அவன் அப்படித்தான் நாம ஒன்னு சொன்னா அவ ஒன்னு சொல்லுவான் என்று சொல்கிறார். 

நான் மாப்பிள்ளை கிட்ட பேசுறேன் என்று அமிர்தாவின் அம்மா சொல்ல எழில் வீட்டுக்கு வர பிறகு எழில் அவரை பஸ் ஏத்த அழைத்துச் செல்கிறார். மறுபக்கம் பழனிச்சாமி பாக்கியம் நினைவுகளோடு வீட்டுக்கு வர அதை பார்த்து அவரது அம்மாவும் அக்காவும் பாக்யா கிட்ட நீ பேசுறியா இல்ல நாங்க பேசவா என்று கேட்க நான் சொல்றேன் இப்போ எனக்கு எதுவும் தோணல என்று பழனிச்சாமி சொல்லி அன்பு குறித்து பாட்டு பாடி கொண்டு செல்கிறார். 

இதையடுத்து செல்வி பாக்யாவின் முகத்தை பார்த்து பார்த்து சிரிக்கிறார். உன்னையும் பழனிச்சாமியையும் நினைத்து பார்த்தேன் என்று சொல்கிறார். பிறகு எழில் அமிர்தாவின் அம்மாவை கூட்டிச் செல்லும் போது அவர் பைக்கை நிறுத்தி இறங்கி குழந்தை பற்றி பேச இப்போதைக்கு குழந்தை வேண்டாம் அது நிலாவிற்கு பிரச்சனையா கூட ஆகலாம். குழந்தை விஷயத்துல நானும் அமிர்தாவும் பேசி முடிவெடுத்ததா இருக்க வேண்டும் நீங்க குடுக்குற பிரஷர்ல நாங்க குழந்தை பெத்துக்க கூடாது என சொல்கிறார். அமிர்தாவுக்கும் நிலாவுக்கும் இந்த வீட்ல எந்த பிரச்சனையும் வராது என சொல்கிறார். 

மறுபக்கம் கோபி ரெஸ்டாரண்டுக்கு வந்த ராதிகாவின் காரை வைத்து பிரைடு ரைஸ் ரெடி பண்ண சொல்லி டின்னர் சாப்பிட செப் வீட்டுக்கு கிளம்ப நாளைக்கு வந்து விடுவீங்களா உங்க வீட்டு அட்ரஸ் எனக்கு வாட்ஸ் அப் பண்ணி வைங்க என்று ரப் அண்ட் டப்பாக பேசுகிறார். இதனால் ராதிகா டென்ஷன் ஆகிறார்.

பிறகு எழில் வீட்டுக்கு வர ஈஸ்வரியிடம் குழந்தை பற்றி அமிர்தா அம்மா கிட்ட பேசினீங்களா ஏன் பாட்டி இப்படி பண்றீங்க என்று கேட்கிறார். நான் பேசணும்ல என்ன தப்பு இருக்கு என்று ஈஸ்வரி கேட்க இந்த வீட்ல திரும்பவும் குழந்தையை பத்தி பேசாதீங்க என்று எழுதி சொல்ல ஈஸ்வரி நீங்க குழந்தை பெத்துக்கர வரைக்கும் நான் பேசுவேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது‌. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.