கோபி வசமாக சிக்க ஜெனிக்கும் உண்மைகள் அனைத்தும் தெரிய வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த ஜோசப் செழியன் மாலினியுடன் இருந்த விஷயங்களை சொல்லி இனிமே அவன் நமக்கு வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதைக் கேட்டு ஜெனி அதிர்ச்சி அடைந்து கண்ணீர் விட்டுக் கொண்டே ரூமுக்குள் சென்று விடுகிறார்.
அதன் பிறகு பாக்யா மாலினியை சந்தித்து உனக்கு என்னதான் பிரச்சனை எதுக்கு நீ செழியனை இப்படி தொந்தரவு பண்ணிக்கிட்டே இருக்க என்று கேட்க எனக்கு செழியனோட கல்யாணம் நடக்கணும் என்று கூறுகிறார். அப்போ ஜெனி அவளோட குழந்தையோட நிலைமை என்ன என்று கேட்க அத பத்தி எனக்கு கவலை கிடையாது என்று சொல்ல பாக்யா சுயநலத்துக்காக என்ன வேணாலும் செய்வேன்னு தெரிஞ்சு போச்சு, திரும்பவும் என் பையன் வாழ்க்கையில வந்த நான் சும்மா இருக்க மாட்டேன் என எச்சரிக்கிறார்.
ஜோசப் இனிமே செழியனோட எந்த உறவும் வேண்டாம் அந்த குடும்பத்தோட யாரும் பேசவும் வேண்டாம் பழகவும் வேண்டாம் நான் போய் வக்கீல் பார்த்துட்டு வரேன் என்று ஜோசப் கிளம்ப பாக்கியா வீட்டிற்குள் நுழைகிறார்.
நீங்க எதுக்கு இங்க வந்தீங்க உங்களுக்கும் உங்களுக்கும் இனி என்ன சம்பந்தம் இருக்கு நல்ல புள்ளைய பெத்து வச்சிருக்கீங்க என்று கோபப்பட பாக்யா நான் ஜெனி இடம் பேசணும் என்று சொல்கிறார். அவ கிட்ட பேச என்ன இருக்கு என ஜோசப் கோபப்பட என் அருமை கிட்ட நான் பேசணும் என்று ஜெனியை கூட்டிக்கொண்டு ரூமுக்கு செல்கிறார்.
ஜெனியிடம் இதுவரை நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்லி இந்த முறை செழியன் மேல எந்த தப்பும் கிடையாது. இந்த மாலினி என்னமோ கேம் விளையாடுறா, நீதான் யோசிச்சு நல்ல முடிவா எடுக்கணும். நீ என்ன முடிவு எடுத்தாலும் நான் உன் கூட நிற்பேன் என்று சொல்லிவிட்டு பாக்யா கிளம்பி செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.