முத்துவால் பாட்டி புலம்ப ரோகினியால் அண்ணாமலையிடம் சிக்கி உள்ளார் விஜயா.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. அதிகாலையில் எழுந்து மீனா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க இதை பார்த்த பாட்டி இவ என்ன காலையிலேயே எழுந்து இந்த வேலையெல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கா? முத்து என்ன பண்ணிட்டு இருக்கான் என்று உள்ளே போய் பார்க்க தரையில் தாத்தாவின் வேட்டியை விரித்து போட்டு படுத்து கொண்டிருக்க பாட்டி டம்ளர்-ஐ தூக்கி போட்டு அவனை எழுப்புகிறார்.

இதனைத் தொடர்ந்து முத்து தாத்தாவோட வேட்டிய போத்திக்கிட்டு படுத்ததனால அவர் நெஞ்சு மேல என்னை தூக்கிப்போட்டு வளர்த்ததெல்லாம் ஞாபகத்துக்கு வந்தது தாத்தா மேலயே படுத்து தூங்குன மாதிரி இருந்தது என சொல்ல பாட்டி கடுப்பாகி திட்டுகிறார்.

பிறகு முத்து பாட்டியிடம் காபி கேட்க மீனா நான் போட்டு தரேனு சொல்ல பாட்டியோட கையில பாட்டி ஸ்டைல தான் வேணும் என சொல்கிறார். பிறகு முத்து பல் துலக்க வெளியே செல்ல பாட்டி விட்டத்தை பார்த்து இவனுக்கு நல்ல புத்தி கொடுங்க என கணவனிடம் வேண்டுகிறார். இதைப் பார்த்த முத்து பாட்டியை கிண்டல் அடிக்கிறார். பிறகு பாட்டி மீனாவை கூட்டிகிட்டு பச்சையம்மன் கோவிலுக்கு போயிட்டு வா என சொல்கிறார்.

மறுபக்கம் அண்ணாமலை, மனோஜ், ரோகினி, விஜயா, பார்வதி என எல்லோரும் கோவிலுக்கு வந்து பத்திரிக்கை வைத்து பூஜை செய்கின்றனர். பிறகு முதல் பத்திரிக்கை ரோகிணி கையில் கொடுக்க பார்வதி அப்பாவை பற்றி கேட்க ரோகினி அவர் பத்தி பேச வேண்டாம் என சொல்லி விடுகிறார். அதன் பிறகு பத்திரிக்கையை வாங்கி கண்கலங்கியபடி விஜயாவை கட்டிப்பிடித்து மனோஜுடன் கடைக்கு கிளம்புகிறார் ரோகிணி.

இதைத் தொடர்ந்து அண்ணாமலை கோவிலை சுற்ற போக பார்வதி விஜயாவிடம் பொண்ணுக்கு நீ என்ன செய்யப் போற என்று கேட்க அதான் 10 லட்சம் ரூபாய் பணத்தை தூக்கி கொடுத்து இருக்கேனே என விஜயா சொல்கிறார். விஜயாவோட அப்பா வந்து பார்த்தா நாமளும் அவருடைய கௌரவத்திற்கு ஏதாவது பண்ணி இருக்கணும் இல்ல, நீ 10 சவரன் நகை செஞ்சு போடு என சொல்ல விஜயா பணத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார்.

வீட்டுக்கு வந்த விஜயா அண்ணாமலையிடம் ரோகினிக்கு 10 சவரன் நகை செஞ்சு போடணும் என சொல்ல கையில் பணம் இல்லை, இருக்கிறது வீட்டு பத்திரம் ஒன்னு தான் அதை எடுத்து வச்சு பணத்தை வாங்கலாம் என பத்திரத்தை எடுக்க போக விஜயா பதறிப் போய் அவரை தடுத்து நிறுத்தி வீட்டு பத்திரத்தை வைத்து பணம் வாங்க வேண்டாம் அதனால பிள்ளைகளுக்குள்ள சண்டை வரும் என திசை மாற்றுகிறார்.

அப்போ வேற என்னதான் பண்றது என கேட்க அதான் உங்க அம்மாவுக்கு குத்தகை பணம் வந்து இருக்கு இல்ல, அதைக் கேட்டு வாங்குங்க என சொல்ல நான் கேட்க மாட்டேன், நான் உன்னை ஊருக்கு கூட்டிட்டு போறேன் நீ கேட்டு வாங்கிங்க என்று சொல்ல விஜயா நான் வரமாட்டேன் என சொல்கிறார். எங்க அம்மா வேணாம் ஆனா அவங்களுடைய பணம் மட்டும் வேணுமா என அண்ணாமலை திட்டி விட்டு நீ கேட்டு வாங்குவதாக இருந்தால் சொல்லு இல்ல அதை பத்தி பேசாத என ஷாக் கொடுக்கிறார்.

இதை தொடர்ந்து ரோகிணி காஸ்ட்லியான பட்டு புடவை தேர்வு செய்து வைக்க அதை பார்த்த அவளது தோழி இதெல்லாம் உன் மாமியார் உங்கள் அப்பா பணக்காரர் என நினைத்து செய்றாங்க உண்மை தெரிஞ்சா என்ன ஆகும் என்று யோசி என்று சொல்ல ரோகிணி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.