பாக்யாவுக்கு கோபி சவால் விட எழில் நறுக் கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.  

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி புதிதாக கிளவுட் கிச்சன் டிசைன்ஸ் தொடங்க போவதாக சொல்ல ஈஸ்வரி கிவுடுன்னா மேகம் மேகத்தில் கிச்சனா என்று கேட்க செழியன் இனியா என இருவரும் சிரிக்க தெரியாம தானே கேட்கிறேன் என்று சொல்ல கோபி அது குறித்து விளக்கம் கொடுக்கிறார். 

நல்ல விஷயம் நீ நல்லா இருந்தா எங்களுக்கு அதுவே போதும் என ஈஸ்வரி சந்தோஷப்பட உனக்கு போட்டி இவர்தான் போல என்று எழில் கிச்சனில் உட்கார்ந்து பாக்யாவுடன் பேசிக் கொண்டிருக்கிறார். அதன் பிறகு கோபி தண்ணீர் எடுத்துச் செல்ல கிச்சனுக்கு வரும்போது இவர்களிடம் பேசிக் கொடுக்க எழில் என்ன எங்க அம்மாவுக்கு போட்டியா என்று கேட்க உங்க அம்மாவோட நான் எதுக்கு போட்டி போடணும்? என கேள்வி கேட்கிறார். 

எனக்கு பிசினஸ்ல 25 வருஷ எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு உங்க அம்மா இதுவரைக்கும் ஒரு விஷயத்தை உருப்படியா முழுசா செஞ்சு இருக்காளா என கேட்க எங்கம்மா அதெல்லாம் நல்லா தான் பண்ணிக்கிட்டு இருக்காங்க என்று எழில் பதில் கொடுக்கிறார். உங்க அம்மாவுக்கு என்னைக்கு கம்பேர் பண்ணாத நான் உங்க அம்மாவை ஒரு ஆளாவே மதிக்கிறது கிடையாது அப்படி இருக்கும்போது எப்படி போட்டியானு நினைப்பேன் உன் மனசுல அப்படி ஒரு எண்ணம் இருந்துச்சுன்னா அதை டெலிட் பண்ணிடு என சொல்கிறார். 

பிறகு பாக்கியா நீ உட்காருடா, நம்மள பாத்து மோட்டிவேஷன் ஆக்கி இந்த பிசினஸ் தொடங்குறார் என்று சொல்ல கோபி உன்ன பார்த்து மோட்டிவேஷன் ஆக்குறாங்களா இரிடேஷன் தான் ஆகறாங்க, இந்த டிசைன்ஸ்ல யார் ஜெயிக்கிறார்கள்  என்பதை காலம் முடிவு பண்ணட்டும் என்று சொல்லி இங்கிருந்து கிளம்பி செல்கிறார். 

மறுநாள் பாக்கியா ரெஸ்டாரன்ட் கிளம்பி கொண்டிருக்க கோபி எல்லாரையும் கூப்பிட்டு நிற்க வைத்து பிசினஸ் தொடங்க இடம் பாத்தாச்சு கிண்டியில ஒரு மெயின் ஆன இடத்தை தான் பார்த்து அட்வான்ஸ் கொடுத்துட்டோம் என்று சொல்கின்றனர். எல்லோரும் கோபிக்கு வாழ்த்து சொல்ல இனியா யாரை வச்சு ஓபன் பண்ண போறோம் என்று கேட்க நான் எந்த அமைச்சரையும் செலிபிரிட்டியும் கூப்பிட போறது கிடையாது என்று சொல்லி அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நடுவில் உட்கார்ந்து எனக்கு இவங்க தான் இந்த உலகத்திலேயே மிகப்பெரிய விஐபி இவங்கள வச்சு தான் திறக்கப் போறேன் என்று சொல்லி பில்டப் ஆக கொடுக்கிறார். 

ஈஸ்வரி பணம் ஏதாவது தேவையா என்று கேட்க அதனால் வேண்டாமா ராதிகா கொடுத்துட்டா இப்போதைக்கு போதுமான அளவு பணம் இருக்கு என சொல்ல பாக்கியா எழிலை கூட்டிக்கொண்டு ரெஸ்டாரண்ட் கிளம்புகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.