![Screenshot_2024-06-10-07-59-16-28_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-10-07-59-16-28_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x433.jpg)
கோபியின் பேச்சைக் கேட்டு ஈஸ்வரி எடுத்த முடிவு அதிர்ச்சி அடைந்துள்ளார் கமலா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் இன்றைய எபிசோடில் இப்படி ஆஸ்பிட்டலில் இருக்க டாக்டர் ரிப்போர்ட் எல்லாம் வந்துடுச்சு எதுவும் பெருசா பிரச்சனை இல்ல ஆனா இன்னைக்கு ஒரு நாள் இங்கேயே இருக்கட்டும், நாளைக்கு வீட்டுக்கு கூட்டிட்டு போங்க என்று சொல்ல பாக்கியா எழில் மற்றும் ராமமூர்த்தியை வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு செழியனுடன் ஹாஸ்பிடலில் தங்குகிறார். துளசி ராதிகாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு ஹாஸ்பிடலில் தங்குகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-10-07-59-30-00_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)
பாக்யா நைட்டெல்லாம் கண் முழித்து ஈஸ்வரி பக்கத்தில் உட்கார்ந்திருக்க கோபி காபி வாங்கி கொடுக்கிறார். மறுநாள் காலையில் ராமமூர்த்தி ஹாஸ்பிடல் வந்து ஈஸ்வரியை நம்மளோட நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போய்விடலாம் என்று சொல்ல கோபி இல்ல அம்மாவை நான்தான் கூட்டிட்டு போவேன். அவங்களை நான் நல்லபடியா பாத்துக்குறேன் என்று சொல்கிறார்.
இதைக் கேட்டு ராமமூர்த்தி கிழிச்ச எனக்கு ஸ்டோக் வர நீ தான் காரணம் இப்போ ஈஸ்வரி இங்க வந்து படுக்கவும் நீதான் காரணம் நீ ஒன்னும் பாத்துக்க தேவையில்லை என்று சொல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-10-07-58-54-26_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)
கோபி உள்ளே வந்து அம்மா நீங்க என்கூட தான் வரணும் நீங்க இப்போ பாக்கியா வீட்டுக்கு போயிட்ட அப்புறம் நான் உடைந்து போயிடுவேன்.. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது என்று கண் கலங்குகிறார். இனிமே உங்கள நான் நல்லபடியா பார்த்துகிறேன் நீங்க என் கூட வாங்க என்று சொல்கிறார்.
பிறகு ராமமூர்த்தி, பாக்கியா, செழியன் ஆகியோர் உள்ளே சென்று ஈஸ்வரியை தங்களது வீட்டிற்கு கூப்பிட நான் இப்போ உங்களோட வந்துட்டேன் கோபி ரொம்ப வருத்தப்படுவான். அவன் என்ன நல்லபடியா பாத்துக்குவான் இனிமே நான் ஒழுங்கா மூணு வேலையும் சாப்பிடுகிறேன் என்று சொல்லி கோபியுடன் கிளம்பி செல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-08-09-49-14-21_f9ee0578fe1cc94de7482bd41accb329-1.jpg)
ராதிகா கோபி ஈஸ்வரி பேச்சைக் கேட்டு தன்னிடம் நடந்து கொள்வதை நினைத்து கண் கலங்க கமலா நீ ஒன்னும் கவலைப்படாதே, அந்த அம்மா ஆஸ்பத்திரிக்கு போனது கூட நல்லதுக்கு தான். இனிமே பாக்யா வீட்டில் அவங்கள இங்க அனுப்ப மாட்டாங்க அவங்க வீட்டுக்கு கூட்டிட்டு போயிருவாங்க நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்ல பெல் அடிக்க கமலா பார் பெல் கூட அடிக்குது என்று கதவை திறக்க கோபி ஈஸ்வரி உடன் வந்து நிற்கிறார். இதைப் பார்த்து கமலா மற்றும் ராதிகா அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.