சொந்தக்காரி சூனியம் வைத்து கொள்கிறார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி எல்லாருக்கும் டெலிவரி பண்ணியாச்சு என்று ராதிகாவிடம் சொல்லி சந்தோஷப்படுகிறார்.
நீதானே எம்பிளாய் கிட்ட ரொம்ப ஃப்ரீயா பேச கூடாதுன்னு சொன்ன இப்ப பாரு என்று செக்ஃபை வர சொல்லி என்னை கேட்காமல் கொள்ளாமல் லீவு போடக்கூடாது, எந்த ஒரு எமர்ஜென்சி இருந்தாலும் என்னை கேட்டு தான் லீவு போடணும். திரும்பவும் இதே மாதிரி நடந்துச்சு உங்களை வேலையை விட்டு தூக்கிடுவேன் எதை பத்தியும் யோசிக்க மாட்டேன் என ஓவராக வெடித்து வாங்க ராதிகா போதும் போதும் என தடுத்து நிறுத்தி செஃப்பை அனுப்பி வைக்கிறார்.
எப்படி ராதிகா இந்த ஸ்ரிட் சூப்பரா என்று கேட்க ஒரே அடியா அவர ஓட வச்சிடுவீங்க போல என்று கோபியை பிடித்து திட்ட என நீ அப்படி பேசினாலும் தப்பு பண்ற இப்படி பேசினாலே தப்பு பண்ற என்று கோபி கேட்க நீங்க ஒரு யூஸ்லெஸ் என திட்டிவிட்டு செல்கிறார்.
அடுத்ததாக ரெஸ்டாரண்ட் வந்த பாக்கியா செல்வி மற்றும் அமிர்தாவை கூப்பிட்டு பழனிச்சாமி அம்மா பேசுறதுக்காக கூப்பிட்டு இருந்தாங்க என்று சொல்ல அண்ணா உன் கிட்ட பேச வெக்கப்பட்டுக்கிட்டு அவங்க அம்மாகிட்ட சொல்லி பேசுதா என்று கலாய்க்கிறார் செல்வி. பாக்யா என்ன எதுவும் உளறிட்டு இருக்க நாளைக்கு பழனிச்சாமி சாரோட பிறந்தநாள் அதனால சமைக்கிற ஆர்டர் எனக்கு கொடுத்திருக்காங்க என்று சொல்ல செல்வி ஓஹோ அதானா விஷயம் என்று கூறுகிறார்.
பிறகு பாக்கியா என சமைக்கலாம் என்று யோசித்து யோசித்து சிரித்துக்கொண்டே லிஸ்ட் போட எதிர்பார்த்த செல்வி அமிர்தாவிடம் அக்காவுக்குள்ள நட்பு தாண்டி ஏதோ ஒன்னு இருக்கு என்று சொல்கிறார். அமிர்தா இருந்தா சந்தோஷம்தான் ஆனால் அதை அவங்களா சொல்லட்டும் நாமளா கேட்கக்கூடாது என சொல்லி சொல்கிறார்.
வீட்டில் ஜெனி செழியன் ஏழு மணிக்கு வந்துருவேன் என்று சொல்லிட்டு போனதால் டைம் பார்த்துக்கொண்டே இருக்கிறார். ஏழு மணி ஆனதும் கீழே வந்து இங்கு மங்குமாக நடந்து கொண்டிருக்க ஈஸ்வரி வந்துருவான் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். ஏழு ஏழரை ஆகிறது ஜெனி பதட்டமாகவே இருக்க திடீர்னு கேட்டு சத்தம் கேட்டு வெளியே ஓடி வர பாக்கியா மற்றும் அமிர்தா வீட்டுக்கு வருகின்றனர்.
அதன் பிறகு எட்டு மணிக்கு செழியன் வீட்டுக்கு வர ஜெனி கோபமாக உள்ளே சென்று விடுகிறார். இனிமே லேட் ஆனா ஜெனிக்கு ஒரு வார்த்தை சொல்லுது என்று பாக்யா சொல்லி போய் பிரஸ் ஆகிட்டு வா சாப்பிடுவ என்று மேலே அனுப்பி வைக்க ராமமூர்த்தி போய் அவளை சமாதானப்படுத்து என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.