பாக்யா இன்வைட் கொடுக்க கோபி கண்டிஷன் போட ராதிகா செக்மேட் வைத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஒருவர் பாக்யாவிடம் கேண்டீன் காண்ட்ராக்டை கேட்க ஈஸ்வரி 2 1/4 லட்சம் கொடுத்த காண்ட்ராக்டர் கொடுத்திடு என்று சொல்லி அழைத்து வர பாக்யா காண்ட்ராக்ட் எல்லாம் கொடுக்க முடியாது என்று சொல்லி ஈஸ்வரிக்கு அதிர்ச்சி கொடுக்கிறார்.
அதன் பிறகு எல்லோரும் பொருட்காட்சி நடக்கும் இடத்தில் கேண்டினை வந்து பார்த்து வியந்து போகின்றனர். எல்லா ஏற்பாடுகளும் தட புடலாக நடக்க எது எது எங்க இருக்கணும் என பேசி முடிவெடுக்கின்றனர். அடுத்து வீட்டுக்கு வந்து பலகாரங்களை செய்கின்றனர்.
அதன் பிறகு பாக்யா எல்லோருக்கும் சப்பாத்தி மற்றும் சிக்கன் குழம்பு பரிமாற கோபி வாசனை பிடித்து பசியில் தவிக்கிறார். பக்கத்தில் ராதிகா ஒக்காந்து இருக்க எதுவும் செய்ய முடியாமல் இருக்கிறார். அதன் பிறகு ராதிகாவிடம் ஏன் ராதிகா நீ சமைச்சிட்டியா இல்ல ஆடர் ஏதாச்சு பண்ணனுமா என்று கேட்க டைம் என்ன ஆச்சு அதெல்லாம் நான் சமைச்சிட்டேன் என்று கூறுகிறார்.
கோபி என்ன சமைச்சிருக்க என்று ஆர்வமாக கேட்க ராதிகா எல்லா உங்களுக்கு புடிச்சது தான் சொல்லி ஹைப் ஏத்தி ஹோட்ஸ் என சொல்ல கோபி அதிர்ச்சி அடைகிறார். பிறகு ஈஸ்வரி என்ன சாப்பாடு என்று கேட்க கோபி எல்லாம் சத்தான சாப்பாடு தான் மா என்று கூறுகிறார்.
அதுக்கு பேர் எதுவும் இல்லையா என்று திரும்பத் திரும்ப கேட்க ஒரு கட்டத்தில் கோபி ஓட்ஸ் என்ன சொன்னதும் இனியா உட்பட எல்லோரும் சிரித்து வருகின்றனர். நான் அந்த வீட்ல இருக்கும்போது சாப்பிட்டு இருக்கேன் நல்லாவே இருக்காது என இனியா கூறுகிறார்.
ஈஸ்வரி கோபிக்கு சிக்கனை எடுத்து வைக்க முயற்சி செய்ய ராமமூர்த்தி அதை தடுத்து விடுகிறார். அடுத்ததாக பாக்கியா நாளைக்கு பொருட்காட்சி தொடங்குது எல்லாரும் வந்துடனும் என அழைப்பு கொடுக்க அதைக் கேட்ட ராதிகா எல்லாருக்கும்னா எனக்கும் சேர்த்தாய் என்று கேட்க எல்லாரும்னா எல்லாரும் தான் என்று பாக்கியம் பதில் சொல்கிறார்.
அடுத்ததாக கோபியின் ராதிகாவும் சாப்பிடும்போது கோபி நீ என்ன பாக்யாவுக்கு அதிகமாக சப்போர்ட் பண்ற? கேட்க எனக்கு பேசணும்னு தோணுது பேசுறேன் வேணும்னா வாங்க நம்ம வீட்டுக்கு போயிடலாம் என்று செக்மேட் வைக்கிறார் ராதிகா. நீ பேசக்கூடாது என கண்டிஷன் போட நீங்க சொன்னா நான் கேட்கணுமா என்ன அதெல்லாம் முடியாது என பதிலடி கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்கிறார் ராதிகா. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.