![IMG_20221206_083938](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/IMG_20221206_083938-696x429.jpg)
எழில் செய்து கொடுத்த சத்தியத்தால் பாக்யா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி அமிர்தாவும் நீயும் எப்போதுமே ஃபிரண்டா இருக்கலாம் ஆனால் அதை தவிர்த்து வேறு எதுவும் இருக்கக்கூடாது இது இந்த பாட்டி மேல சத்தியம் என சத்தியம் வாங்க எழில் வேறு வழியில்லாமல் சரி பாட்டி எனக் கூற பாக்யா அதிர்ச்சி அடைகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/IMG_20221205_110213-1.jpg)
அடுத்து பாக்கியா செல்வியுடன் வெளியில் சென்று வீட்டுக்கு வர அப்போது அந்த ஏரியா கவுன்சிலர் பாக்கியாவை ஏளனமாக பேசுகிறார். நான் தேர்தலில் நிற்கவில்லை என சொல்லி பாக்கியா இங்கிருந்து நகர்கிறார். அடுத்து பேங்கிற்கு செல்ல அங்கு கோபியின் டாக்குமெண்ட் கேட்கின்றனர். இதனால் பாக்கியா வெளியே எழுந்து வந்து விடுகிறார். வீட்டுக்கு வந்து எழிலிடம் நடந்து விஷயங்களை சொல்ல ஈஸ்வரி லோனும் வேண்டாம் வீட்ல இருக்க வேலைய பாரு என கூறுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2022/12/IMG_20221205_110125-1.jpg)
அடுத்து ஜெனி செழியன் இடம் பாட்டியிடம் எழில் பற்றிய விஷயம் சொன்னது சரியா என கேட்டு திட்டுகிறார். செய்தி என்னும் தப்புதான் என சொல்லி மன்னிப்பு கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.