கான்ட்ராக்ட்டை பறிக்க ஒருவர் வீட்டுக்கு வர ஈஸ்வரி ஐடியா கொடுக்க பாக்யா அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் பாக்கியா பழனிச்சாமி சந்தித்து பேசிவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
வீட்டுக்கு வருவதற்கு முன்பாக ஜெனி வீட்டுக்கு சென்று விஷயத்தை சொல்லிவிட்டு இந்த கேண்டீன் ஓபன் பண்ணும்போது நீயும் என் கூட இருக்கணும் என்று சொல்லும்போது ஜெனி அதற்கு மறைமுகமாக மறுப்பு தெரிவித்து விடுகிறார்.
வீட்டில் இனியா ஆவலோடு அம்மாவுக்காக காத்திருக்க ராமமூர்த்தி பாட்டு பாடி ஈஸ்வரியை பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். பாக்யா வந்ததும் இனியா கட்டிபிடித்து முத்தம் கொடுத்து வாழ்த்து சொல்கிறார். செழியன் கையில் பொக்கே எடுத்து வந்து வாழ்த்து சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல பாக்யா அவனை கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்ல செழியன் கண் கலங்குகிறான்.
பிறகு கோபியும் வந்துவிட ராமமூர்த்தி ஈஸ்வரி மற்றும் கோபியை வெறுப்பேற்றி ஓட விடுகிறார். அதனைத் தொடர்ந்து பாக்யாவை பார்க்க கேன்டின் நடத்தும் ஒருவர் வீட்டுக்கு வர ராமமூர்த்தி பாக்யாவை கூப்பிட்டு விட அவர் நீங்க ஆறுமுகம் கிட்ட ஐம்பதாயிரம் அதிகமாக கொடுத்து கேன்டீன் காண்ட்ராக்ட் எடுத்த விஷயம் எனக்கு தெரியும். நான் அதை விட 50,000 ரூபாய் அதிகமாக தரேன் என சொல்ல பாக்கியா அதெல்லாம் கொடுக்க முடியாது என சொல்கிறார்.
மேலும் 10 ஆயிரம், 20 ரூபாய் போட்டு தரேன் என்று சொல்ல ஈஸ்வரி பாக்யாவை உள்ளே கூட்டிச் சென்றேன் இந்த செலவு பண்ணியதற்கு எல்லாம் சேர்த்து இரண்டே கால் லட்சம் வரை கேளு, அவர் கொடுக்கிறேன்னு சொன்ன காண்ட்ராக்டர் கொடுத்தது அதுதான் நல்லது என்று சொல்ல பாக்யா வெளிய வந்து காண்ட்ராக்ட் கொடுக்க முடியாது என சொல்லி ஈஸ்வரிக்கும் சேர்த்து அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.