கோபியோடு கூட்டு சேர்ந்து பாக்யாவை திட்டி உள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் காலையில் பாக்யா கவர்மெண்ட் ஆபீஸ் கிளம்ப ஈஸ்வரி பொருட்காட்சி எப்ப நடக்கப் போகுதுன்னு சொல்ல போறாங்களா இல்ல நடக்கவே நடக்காது என்று சொல்லப் போறாங்களா என்று எதிர்மறையாக பேச ராமமூர்த்தி ஈஸ்வரியை திட்டுகிறார்.
பிறகு பாக்யா ஆபீஸ்க்கு வந்து என்ன சொல்ல போகிறார்கள் என்று காத்திருக்க வீட்டில் ராமமூர்த்தி பதட்டமாக உட்கார்ந்து இருக்க ஈஸ்வரி மற்றும் கோபி இருவரும் சேர்ந்து மூன்று தொங்க போட்டுக்கிட்டு வந்து மாமா நான் போட்ட காசு எடுத்துடலாமென்று நினைத்தேன், ஆனா பொருட்காட்சி நடக்காதுன்னு சொல்லிட்டாங்க எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல மாமா இதை விட பெருசா ஏதாவது செய்யப் போறேன்னு சொல்லுவா என்று மக்கள் அடிக்க ஈஸ்வரி அவ சொன்னாலும் சொல்லுவா என தாளம் தட்டுகிறார்.
இதையெல்லாம் கிச்சனிலிருந்து இருந்து பார்த்த ராதிகா வெளிய வந்து ரெண்டு பேருக்கும் பதிலடி கொடுக்கிறார். பாக்யா பக்கத்துல நியாயம் இருக்கு அதனால நான் சப்போர்ட் பண்றேன் நீங்க உங்களுக்கு சப்போர்ட் பண்ணாலும் பரவால்ல ஆனா இப்படி டிஸ்கரேஜ் பண்ணாதீங்க என சொல்கிறார்.
பிறகு ராமமூர்த்தி ராதிகாவை கூப்பிட்டு எதுவாக இருந்தாலும் வெட்டு ஒன்னு துண்டு ஒன்னு பேசுற, நியாயமா நடந்துக்க இவ்வளவு அறிவோட இருக்க நீ எப்படி கொஞ்சம் கூட யோசிக்காமல் இவனை கட்டிக்கிட்ட? ரொம்ப நாளா இதை கேட்கணும்னு தோணுகிறது இன்றைக்கு கேட்டுவிட்டேன் நிறைவா இருக்கு என சொல்கிறார்.
அடுத்ததாக பொருட்காட்சி நாளை மறுநாள் இருந்து 15 நாட்கள் நடக்கும் என அறிவிப்பை வெளியிட இங்கே வீட்டில் செழியன் உட்பட எல்லோரும் என்ன நடந்துச்சுன்னு தெரியாம பதட்டத்தில் இருக்கின்றனர். செழியன் எழிலுக்கு போன் செய்ய எழில் பொருட்காட்சி குறித்த அறிவிப்பை சொல்ல அதைக் கேட்டு சந்தோஷப்படுகிறார்.
பிறகு ராமமூர்த்தி ரூமுக்கு வந்து ஈஸ்வரியை பாட்டு பாடி வெறுப்பேற்றி பொருட்காட்சி நடக்க போகும் விஷயத்தை சொல்லி வெறுப்பேற்றுகிறார். என் கண்ணு முன்னாடி இந்த விஷயத்தை உன் புள்ள கிட்ட சொல்லு அவன் மூஞ்சி போற போக்கை பாக்கணும் என சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்யா மற்றும் எழில் பழனிசாமியிடம் விஷயத்தை சொல்ல அவர் ஸ்வீட்டுடன் வந்து வாழ்த்து சொல்கிறார். பாக்கியா நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன் என சொல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.