![Screenshot_2023-12-04-08-20-53-71_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-04-08-20-53-71_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x433.webp)
பாக்கியாவுக்கு குழி பறிக்க பிளான் போட்டு பல்பு வாங்க உள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆபீஸிலிருந்து வீட்டுக்கு வந்த கோபி பாக்கியா கொண்டு வந்த மூட்டைகளில் இருந்து ஏதோ துர்நாற்றம் வீசுவதாக சொல்ல பிறகு ஈஸ்வரியும் ஆமாம் வருகிறது என்று செல்ல மூட்டையை பிரித்து பார்க்கும் போது காய்கறி அனைத்தும் அழுகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-02-07-59-48-95_f9ee0578fe1cc94de7482bd41accb329-1-jpg.webp)
ஈஸ்வரி ஏற்கனவே ஒரு லட்சத்து 60 ஆயிரம் போச்சு இப்ப இதுவும் போச்சா என பாக்கியாவிடம் கோபப்பட்டு சென்று விடுகிறார். பிறகு பாக்யா சமைக்க மனம் இல்லாமல் டயர்டாக உட்கார்ந்திருக்க எழில் வெளியே வாங்கலாம் என்று சொல்ல ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணலாம் அதன் பிறகு என்ன செய்யலாம்னு யோசிக்கலாம் என்று பாக்கியா பேசிக் கொண்டிருக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-04-08-24-17-71_f9ee0578fe1cc94de7482bd41accb329-jpg.webp)
இதனை அரைகுறையாக கேட்ட கோபி பாக்ய சமைத்த சாப்பாட்டை வேஸ்ட் பண்ண வைக்கணும் என பிளான் போட்டு இனியாவிடம் சென்று வெளியில போய் என்ன சாப்பிடலாம் என்று சொல்லி சம்மதிக்க வைத்து பிறகு ஒவ்வொரு இடமும் சென்று பேசி சம்மதிக்க வைக்கிறார்.
இறுதியாக கோபி ராதிகா ஈஸ்வரி இனியா செழியன் ஆகியோர் வெளியில் பின்னர் சாப்பிட கிளம்பி விடுகின்றனர். ராமமூர்த்தி இடம் அவர் சமைத்து வச்சது பத்தி எனக்கு கவலை கிடையாது. தூக்கி குப்பையில் போட்டுட்டு என சொல்லிவிட்டு செல்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2023/12/Screenshot_2023-12-02-07-59-12-86_f9ee0578fe1cc94de7482bd41accb329-2-jpg.webp)
பிறகு ராமமூர்த்தி பாக்யாவிடம் வந்து அவன் வேணும்னே பிளான் போட்டு பண்றான் என்று சொல்ல பாக்கியா சமைக்கவே இல்ல அவர் தப்பான கணக்கு போட்டு விட்டார் என சொல்கிறார். சூப்பர்மா அவனுக்கு இதெல்லாம் வேண்டும் என்று சொல்ல எழில் யார் யாருக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கொண்டு ஓட்டலுக்கு கிளம்பிச் செல்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.