Baakiyalakshmi Episode Update 01.07.23
Baakiyalakshmi Episode Update 01.07.23

ஷாக்கு மேல் ஷாக்கால் மிரண்டு போய் உள்ளார் கோபி.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் பாக்யா தன்னுடைய டீம் உடன் பிஸியாக இருக்க சமைத்த உணவுகளை பேசியது பார்க்கிறார். அப்போது பழனிச்சாமி கிச்சனுக்கு என்னுடைய எல்லோரும் அவரை வரவேற்று பாக்யா செய்த ஸ்வீட்டுகளை கொடுக்க அவர் சாப்பிட்டுவிட்டு ஆஹா ஓஹோ என பாராட்டுகிறார்.

இதனைத் தொடர்ந்து எல்லோருக்கும் பரிமாற சாப்பிட்டு முடித்த சுதாகர் பாக்யாவிடம் சாப்பாடு பிரமாதம் இதுவரைக்கும் நான் இப்படி ஸ்வீட்டை எங்கேயுமே சாப்பிடுவது கிடையாது அவ்வளவு அருமையா இருந்துச்சு என பாராட்டிக் கொண்டிருக்கிறேன் அவரது மனைவியின் சாப்பாடு அருமை என சொல்லி பாராட்டி நாளைக்கு சமைக்க வேண்டிய லிஸ்ட்டை கொடுக்கிறார்.

மறுபக்கம் கோபி நாலு நாளைக்கு எந்த ஒரு டிஸ்டர்பன்ஸும் இல்லாம ஜாலியா ரிசார்ட்ல ராதிகாவோட இருக்கலாம் என சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்க இங்கே வெளியே ராதிகா மயூவுடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக செல்வியை பார்க்க அதிர்ச்சி அடைகிறார்.

செல்வி பாக்யாவிடம் சென்று ராதிகா இந்த கல்யாணத்துக்கு வந்திருக்கும் விஷயத்தை சொல்ல பாக்கிய சரி விடு பார்த்துக்கலாம் நாம் எதற்கு அவங்க கிட்ட பிரச்சனை பண்ண போறோம் என சொல்கிறார். மறுபக்கம் ராதிகா ரூமுக்கு வர கோபி ரொமான்ஸ் ஆக நெருங்க நான் அவளை பார்த்தேன் என சொல்ல கோபி யார் என்னவென்று கேட்க உங்க வீட்டு வேலைக்காரி என்ன சொன்னதும் செல்வியா என்று அதிர்ச்சி அடைகிறார்.

அந்த லாம்ப் போஸ்ட் இங்க இருக்கான், செல்வியும் இருக்கா இவங்க ரெண்டு பேருக்கும் பொதுவான ஆளு பாக்கியம் தான் அப்ப அவளும் இங்க தன் இருக்காளா போச்சு என நெஞ்சை பிடித்து உட்கார ராதிகா என்ன ஹார்ட் அட்டாக் கேட்க போற போக்க பாத்தா வந்துடும் போல என புலம்புகிறார்.

அதன் பிறகு கோபி வெளியே நடந்து வந்திருக்கும் போது பாக்கியா இங்க வந்திருக்க வாய்ப்பில்லை என நினைத்து கன்ஃபார்ம் செய்து கொள்வதற்காக இனியாவுக்கு போன் செய்து விசாரிக்க அம்மா இங்கே இல்ல, ஒரு வேலை விஷயமா பாண்டிச்சேரி போய் இருக்காங்க என்று சொன்னதை கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைகிறார்.

அடுத்ததாக பழனிச்சாமி கிச்சனுக்குள் உட்கார்ந்து எல்லோரிடமும் பேசிக்கொண்டிருக்க செல்வியின் வாழ்க்கை கதையை கேட்டு தன்னுடைய அம்மா தங்களை வளர்த்தது பற்றி ஞாபகம் வந்துவிட்டதாக சொல்லி பீல் செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

அதன் பிறகு வெளியான ப்ரோமோ வீடியோவில் பாக்கியாவும் பழனிச்சாமி பேசிக்கொண்டு இருப்பதை பார்த்த கோபி பழனிச்சாமி இடம் சென்று சண்டை போட சுதாகருக்கு பாக்கியாவின் கணவர் தான் கோபி என்பது தெரிய வருகிறது.