![Screenshot_2024-06-13-07-43-03-44_f9ee0578fe1cc94de7482bd41accb329](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-13-07-43-03-44_f9ee0578fe1cc94de7482bd41accb329-696x408.jpg)
பழனிச்சாமிக்காக பாக்கியா செய்த விஷயத்தால் கோபியை வைத்து ராதிகாவுக்கு சவால் விட்டுள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ராதிகா நைட் எல்லாம் ஓகே சொன்ன விஷயங்களால் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருக்கிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-13-07-42-37-77_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)
அடுத்த நாள் காலையில் பாக்யாவுக்கு ரெஸ்டாரண்டில் இருந்து போன் கால் வர அவர் கிளம்பிச் செல்கிறார். வழியில் ஈஸ்வரி மற்றும் கோபியை பார்க்க ஈஸ்வரி எங்க கிளம்பிட்ட என்று கேட்க ரெஸ்டாரண்ட் போறேன் அத்தை.. கிரைண்டர் வேலை செய்யவில்லைனு போன் பண்ணாங்க அதனாலதான் கிளம்பி போறேன் என்று சொல்கிறார். பாக்கியா கிளம்பி சென்றதும் கோபி இவ்வளவு காலையில் வேலைக்கு போயிட்டா வீட்ல இருக்க வேலையெல்லாம் யார் பாப்பா என்று கேட்க அதுவும் பாக்யா தான் பண்ணுவா.. வீட்லயும் சமைச்சு வச்சுட்டு ரெஸ்டாரண்ட்ல வேலை செஞ்சிட்டு மதியம் சாயங்காலம் வந்து வீட்ல எங்களுக்கு மாத்திரை மருந்து கொடுத்து சாப்பிட வச்சுட்டு திரும்ப கிளம்பி போவா என்று சொல்ல கோபி மிரளுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-13-07-43-32-58_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)
இதைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்த கோபி ஈஸ்வரியை உட்கார வைத்து இன்னைக்கு நானே உங்களுக்கு பிரேக்பாஸ்ட் செய்து தரேன் என்று சொல்ல ஈஸ்வரி கோபி சமையலை நினைத்து பயப்படுகிறார். தோசை ஊற்ற தோசை வராத நிலையில் மாவு சரியில்ல என்று சொல்கிறார். பிறகு ஈஸ்வரி தோசையை எப்படி ஊத்தணும் என்று சொல்லிக் கொடுக்க அவரே தோசையை ஊற்றி கொண்டு வந்து சாப்பிட வைக்கிறார். உதவி செய்யப் போன ராதிகாவையும் விரட்டி விடுகிறார் கோபி. இதனால் ராதிகா பயங்கர அப்செட்டில் இருக்க அங்கு வந்த ஈஸ்வரி இன்னும் கொஞ்ச நாள்ல என் பையனை இங்க இருந்து அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போறேன் பாரு என்று சவால் விடுகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/Screenshot_2024-06-13-07-44-08-57_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)
அடுத்ததாக பழனிச்சாமி பாக்கியா ரெஸ்டாரன்ட் பக்கத்தில் புதிய கடையை திறக்க பழனிச்சாமி வீட்டுக்கு சென்ற நேரத்தில் பாக்யா அவரது கடையை டெகரேட் செய்து ஆச்சரியப்படுத்துகிறார். குடும்பத்துடன் வந்த பழனிச்சாமி இதைப் பார்த்து வியக்கிறார். விமல் வேற யாரும் வரலையா என்று இனியாவை பற்றி மறைமுகமாக கேட்க பாக்கியா உங்க மாமா தான் அவங்க யாரு இன்னும் கூப்பிடலையே என்று பதில் கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.