ஜவான் படம் கொடுத்த தைரியத்தால் சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார் அட்லீ.

தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து விஜயை வைத்து தெறி மெர்சல் பிகில் என மூன்று படங்களை இயக்கினார்.

அடுத்ததாக தற்போது ஷாருக்கானை வைத்து பாலிவுட் சினிமாவின் ஜவான் என்ற படத்தை இயக்கியுள்ளார். வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி உள்ளார்.

தற்போது வரை ஒரு படத்திற்கு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வந்த அட்லி சம்பளம் 55 கோடியாக உயர்த்தி உள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்கவும் கமிட் ஆகி இருப்பதாக தெரியவந்துள்ளது.

அட்லி தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியது தயாரிப்பாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.