பிராமணர்களே, நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்கிறேன்: இயக்குனர் அனுராக் காஷ்யப் சர்ச்சை பேச்சு..
பிராமணர்கள் பற்றிய சர்ச்சை பேச்சுக்கு அனுராக் மன்னிப்பு கேட்டிருப்பது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த தகவல்கள் காண்போம்..
பாலிவுட் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் அனுராக் காஷ்யப், தனது வலைப்பக்கத்தில், ‘பஞ்சாப் 95, தடக் 2 மற்றும் புலே போன்ற படங்களைத் தடை செய்ததற்காக தணிக்கைக்குழு மற்றும் மத்திய அரசை கடுமையாக சாடி பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
சமூகத்தில் நடக்கும் அவலங்களை காட்டும் ‘பஞ்சாப் 95’, ‘டீஸ்’, ‘தடக் 2’ போன்ற பிற படங்களும் தணிக்கை வாரியத்தின் கோபத்திற்கு ஆளாகி வெளியாகாமல் உள்ளது என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பிராமணர்களுக்கு எதிராக, அனுராக்கின் கருத்தை எதிர்த்து கேள்வி கேட்பவர்களிடமும் காட்டமாக பதில் கொடுத்த அனுராக், “நான் பிராமணர்கள் மீது சிறுநீர் கழிப்பேன், உனக்கென்ன பிரச்சனை?” என அவர் பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதைத் தொடர்ந்து, பலர் சமூக வலைப்பக்கங்களில் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வந்த நிலையில், இதுகுறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
இந்த எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அனுராக் காஷ்யப், நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பு கேட்டு போட்டிருக்கும், பதிவில் ‘மனுவாதிகள் மற்றும் கலாச்சாரமற்ற பிராமணர்களுக்கு தான் மாஃபி. இந்த மன்னிப்பு, என்னுடைய பதிவிற்காக அல்ல. ஆனால், சூழலில் இருந்து அகற்றப்பட்ட அந்த ஒரு வரிக்கும், வெறுப்புணர்வை ஏற்படுத்தியதற்கும். உங்கள் மகள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுக்கு சன்ஸ்காரின் முக்கியஸ்தர்களிடமிருந்து பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டல் வருகிறது.
எனவே, என்ன சொன்னாலும் அதைத் திரும்பப் பெற முடியாது, நானும் அதைத் திரும்பப் பெற மாட்டேன். ஆனால், நீங்கள் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டலாம். என் குடும்பத்தினர் எதுவும் சொல்லவில்லை, சொல்லவும் இல்லை.
எனவே நீங்கள் என்னிடமிருந்து மன்னிப்பை விரும்பினால், இதுவே எனது மன்னிப்பு. பிராமண மக்களே, பெண்களை விட்டுவிடுங்கள், அது மனுவாதத்தில் இல்லை. நீங்கள் யார் நீங்கள் ஒரு பிராமணர் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மீதமுள்ளவற்றுக்கு, நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்’ என நிபந்தனையுடன் மன்னிப்பு கேட்டுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
