Amitabh Bachan clash Producer :
அமிதாப்பிடம் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் ஆனால் அது விரைவில் சரி செய்யப்படும் என எஸ்.ஜே.சூர்யா கூறியுள்ளார்.
இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன் இதுவரை ஒரு தமிழ் படத்தில் கூட நடித்ததில்லை. ரஜினி, ஷங்கர் என பலர் அழைத்தும் தெலுங்கு படத்தில் கூட நடித்த அமிதாப்பச்சன், தமிழ் பக்கம் மட்டும் இதுவரை தலைக்காட்டியதில்லை.
முன்னணி நடிகரை மணக்கும் டாப்ஸீ, அவரே வெளியிட்ட தகவல் – யார் அந்த ஹீரோ தெரியுமா?
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் உயர்ந்த மனிதன் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க அமிதாப் பச்சன் சம்மதித்திருப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சில மாதங்களாக இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.
இதற்குள் அமிதாப் பச்சனுக்கும் தயாரிப்பாளருக்கும் மோதல் என்றும் இதனால் அமிதாப் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியானது.
ஆனால் அதை எஸ்.ஜே.சூர்யா மறுத்துள்ளார். மேலும் அமிதாப்பிடம் கருத்து வேறுபாடு இருப்பது உண்மைதான் ஆனால் அது விரைவில் சரி செய்யப்படும் என கூறியுள்ளார்.