இந்திய வீரர் ஆகாஷ் மாலிக் யூத் ஒலிம்பிக் வில் வித்தை போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இவர் ஒரு ஏழை விவசாய குடும்பத்தை சேர்த்தவர்.
குடும்பத்தில் பல தடைகள் இருந்தும் அதனை தாண்டி வில் விதையில் வெற்றி பெற்று பதக்கங்கள் பெற்றதை அடுத்து அவரின் குடும்பத்தினர் அவருக்கு உறுதுணையாக இருக்கின்றனர். நல்ல பயிற்சியும் குறிக்கோளுடனும் இருந்த ஆகாஷ் இந்தியாவிற்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்து இருக்கின்றார் .
கடந்த வியாழக்கிழமை யூத் ஒலிம்பிக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் இந்தியா இப்போட்டியில் 3 தங்கம், 9 வெள்ளி மற்றும் 13 வெண்கல பதக்கங்களுடன் 17-வது இடத்தில் உள்ளது.