கதை ஓகே ஆனால் இயக்குனர் மகிழ் திருமேனிக்கு அஜித் கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தின் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அஜித் தற்போது லைட் ஆன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள படத்தில் நடிக்க தயாராகி வருகிறார்.
இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் விக்னேஷ் சிவன் இந்த படத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதை அடுத்து இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கப் போகிறார் என தகவல் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் அஜித் மகிழ் திருமேனிக்கு கண்டிஷன் ஒன்றை போட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதாவது இயக்குனர் சொன்ன கதை அஜித்துக்கு பிடித்து விட நடிக்க ஓகே சொல்லி உள்ளார். ஆனால் படம் முழுவதும் நிறைய ஆக்சன் காட்சிகள் இடம் பெற வேண்டும் அதற்கேற்றார் போல மாற்றங்களை செய்யும்படி கண்டிஷன் போட்டுள்ளார்.
அஜித்தின் கண்டிஷனுக்கு ஏற்றார் போல கதையில் மகிழ் திருமேனி மாற்றங்களை செய்த பிறகு இது குறித்த அதிகாரப்பூர்வா அறிவிப்பு வெளியாகும் என தெரிய வந்துள்ளது. இந்தப் படம் லியோ படத்துடன் மோதும் எனவும் சொல்லப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.