Ajith Circular : தமிழிசையின் பேச்சை அடுத்து தல அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து வருபவர். படத்திலும் சரி நிஜத்திலும் சரி அரசியல் சாயம் பூசி கொள்ள விரும்பாதவர் என்பது நாம் அனைவர்க்கும் தெரிந்ததே.
தன்னுடைய பெயரையும் ரசிகர்கள் என்ற பெயரையும் பயன்படுத்தி அரசியலில் ஈடுபாடு செலுத்தவே தன்னுடைய ரசிகர்கள் மன்றங்களையும் இயக்கங்களையும் கலைத்தவர்.
இந்நிலையில் தற்போது மீண்டும் அஜித் ரசிகர்கள் என்ற பெயரில் சிலர் பா.ஜ.க கட்சியில் இணைந்தனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழிசை அஜித் தான் நேர்மையானவர்.
அவரை போலவே அவரது ரசிகர்களும் நல்லவர்கள். அதனா பாஜக-வில் இணைந்துள்ளனர். மோடியின் திட்டங்களை அஜித் ரசிகர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
தமிழிசையின் இந்த பேச்சை தொடர்ந்து தல அஜித் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு தன்னுடைய ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதோ அந்த அறிக்கை