ஷங்கரின் மகளுக்கு இரண்டாவது திருமணம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சங்கர். பிரம்மாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த இவரை மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கு கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்த ஒரு சில மாதங்களில் ரோஹித் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில் ஐஸ்வர்யா அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யாவுக்கு உதவி இயக்குனர் தருண் கார்த்திக் என்பவருக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. ஏற்கனவே நிச்சயதார்த்தம் முடிந்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்த நிலையில் தற்போது திருமணம் நடந்துள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.