Aishwarya Rajesh Contribute to CM Fund

முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு லட்சம் ரூபாயும் பெப்ஸி அமைப்புக்கு ஒரு லட்சம் ரூபாயும் அளித்து உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Contribute to CM Fund : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் தொற்று உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரசால் இந்தியாவும் நாளுக்கு நாள் அதிகமான பாதிப்பை சந்தித்து வருகிறது.

தமிழகத்திலும் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு இருப்பதன் காரணமாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மக்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதனால் பல்வேறு திரையுலக பிரபலங்கள் முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூபாய் ஒரு லட்சமும் பெப்ஸி தொழிலாளர்களுக்காக ரூபாய் ஒரு லட்சமும் நிவாரணமாக வழங்கியுள்ளார்.

இதனால் ரசிகர்கள் பலரும் ஐஸ்வர்யா ராஜேஷ் பாராட்டி வருகின்றனர்.