திருச்சியில் இருந்து இன்று அதிகாலை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று 130 பயணிகளுடன் புறப்பட்டது.
விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, விமானத்தில் ஏற்பட்ட தொழிற்நுட்ப கோளாறு காரணமாக , தனது கட்டுப்பாட்டை இழந்து விமானத்தில் இருந்த( ஏடிசி டவர் ) போக்குவரத்து கட்டுப்பாடு கோபுரம் மற்றும் சுற்றுச்சுவர் மீது மோதியது. இதனை அடுத்து விமானம் மும்பைக்கு சென்றது.
மும்பைக்கு சென்ற விமானம், சரியாக 4மணிநேரத்தில் மும்பையில், அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. விமானம் அவசரமாக தரையிறக்கபட்டாலும், 130 பயணிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
விமானியின் சாதுர்யதால், பெரும் விபத்து தவிர்க்கபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து ஆய்வு செய்ய அதிகாரிகள் பரிந்துரை செய்தனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தமிழக அமைச்சர் வெல்லமந்தி நடராஜன் ஆய்வு மேற்கொண்டார்.