ADMK MLA

ADMK MLA : கரூர் அருகே பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெரும் நிகழ்ச்சியில், அதிமுக எம்.எல்.ஏ கீதாவை, அத்தொகுதி பொதுமக்கள் ” ராங்க் நம்பர் ” என கூறி கலாய்த்துள்ளனர்.

துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட,. சட்டசபை தொகுதிகளில், பொதுமக்களிடம் மனு பெற்று வருகிறார்.

இவர் இவரது தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இவர்மீது இருந்து வந்துள்ளது.

குறிப்பாக, கிருஷ்ணராயபுரம் , அதிமுக எம்.எல்.ஏ கீதா , அவரது தொகுதி பக்கமே எட்டி பார்க்காத காரணத்தால், தம்பிதுரை அந்த தொகுதிக்கு செல்லும் போது பொதுமக்களின் எதிர்ப்பால் திணறி வருகிறார்.

இந்நிலையில், நேற்று கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் மனுக்கள் பெறுவதற்காக, தம்பிதுரை உடன் அதிமுக எம்.எல்.ஏ கீதா மற்றும் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

அப்போது பாலபட்டியை சேர்ந்த தங்கவேல் என்பவர், ” எங்கள் கிராமத்தையே உங்கள் எம்.எல்.ஏவிற்கு தெரியாது.

நாங்கள் அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினால்,  ‘ இராங் நம்பர் ‘ என கூறி போனை கட் செய்து விடுவார்”  என்று கூறினார்.

இதற்கு, உடனே கீதா ” அப்படி எல்லாம் இல்லை” என்று பேச துவங்கியதும் பொதுமக்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அதிமுக எம்.எல்.ஏ கீதாவை ” ராங்க் நம்பர் ” என கூறி கலாய்தனர். அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை அவர்களின் கவனத்தை திசை திருப்ப எண்ணி , ‘ அவர் 5 ஆண்டுகள் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தார். அவருக்கு அனைத்து கிராமங்களும் தெரியும் ‘ என்று கூறினார்.

பின்னர் எம்.எல்.ஏ கீதாவை அங்கிருந்து அவசர அவசரமாக அங்கிருந்து அழைத்து சென்று விட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.