லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் உள்ள சிவன் கோயிலில் அபிஷேகம் செய்த நடிகை திரிஷாவின் வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

தென்னிந்திய திரை உலகில் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் தற்போது காஷ்மீரில் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை திரிஷா காஷ்மீரில் உள்ள மாமல்லேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிவனுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபாடு செய்துள்ளார். அதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவாக பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது இணையதளத்தில் அதிக பார்வையாளர்களை பெற்று பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.