மூஞ்ச பாரு நாயே என நிக்சன் பேசிய பேச்சுக்கு கண்டனத்தை பதிவு செய்துள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ள நிக்சன் நேற்று அர்ச்சனா உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை மூஞ்ச பாரு நாயே என கடுமையான வார்த்தைகளால் பேசி காரி துப்பி அவமானப்படுத்தினார்.
இந்த நிலையில் நிக்சனின் வார்த்தைகளுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளார் நடிகையின் மக்கள் நீதி மையத்தின் உறுப்பினருமான ஸ்ரீபிரியா. இது குறித்த அவரது பதிவில் #BiggBoss7Tamil நிக்சன் தம்பி…மூஞ்சப்பாரு!நாயே! சொறுகிடுவேன்!!! இவ்வார்த்தைகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கு ஏற்புடையதல்ல… எதிரில் இருப்பவர் என்ன பேசியிருந்தாலும்…தீதும் நன்றும் பிறர்தர வாரா… என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு