பிரபல நடிகையான ஸ்ரேயா சரண் தனது சமூக வலைதள பக்கத்தில் புடவையில் வித்தியாசமாக கவர்ச்சி காட்டி எடுக்கப்பட்டிருக்கும் போட்டோவை பதிவிட்டிருக்கிறார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம், விஷால் போன்ற பல முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து பல ரசிகர்களின் மனதில் நீங்க இடம்பிடித்தார். இவர் நடிப்புக்கு மட்டுமல்லாமல் இவரின் நடனத்திற்கும் தனி ரசிகர் கூட்டம் உண்டு என்றே சொல்லலாம்.

இப்படி பிரபலம் முன்னணி நடிகையாக ஜொலித்த இவர் திடீரென்று தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பின்பு படம் நடிப்பதை தவிர்த்துவிட்டு ஸ்பெயின் நாட்டில் செட்டிலாகிவிட்டார். அதற்குப் பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஸ்ரேயா தனது மகளுடன் கொஞ்சி விளையாடும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து வித்தியாசமான ஆடைகளில் கவர்ச்சி காட்டும் புகைப்படங்களையும் தற்போது பதிவிட்டு இணையத்தை தெறிக்கெடுத்து வருகிறார். அந்த வகையில் புடவையில் வித்தியாசமாக கவர்ச்சி காட்டும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.