நடிகை சமந்தா சகுந்தலம் திரைப்படத்தின் புதிய புகைப்படத்தை மகாசிவராத்திரியை முன்னிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது யசோதா திரைப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து சகுந்தலம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். குணசேகர் இயக்கத்தில் புராணக்காலம் காதல் கதையாக உருவாகி இருக்கும் இப்படம் வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாக உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் ஒரு சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்ததை தொடர்ந்து நடிகை சமந்தா தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு மீண்டும் ஒரு புதிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். மேலும் அதில், “ஓம் நமசிவாய சிவபெருமானின் அருள் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்கட்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். அது தற்போது வைரலாகி வருகிறது.