நடிகை நதியா ஏற்காட்டு மலையில் காத்து வாங்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்திய சினிமாவில் 80-களில் நாயகியாக பல ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நதியா.
இவர் தற்போது நடிகர்களுக்கு அம்மாவாக குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். தற்போது 56 வயதான நதியா இந்த வயசிலும் இளமை மாறாமல் அழகாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இவர் ஏற்காடு மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்கு சூரிய ஒளியில் காத்து வாங்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/CqSxBvZPztT/?igshid=YmMyMTA2M2Y=