சீரியல் நடிகை ஸ்ரீநிதி சிம்புவை காதலிப்பதாக கிளப்பிய நிலையில் தற்போது இன்னொரு சீரியல் நடிகை சிம்பு மீது காதல் என பரபரப்பை கிளப்பியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவருக்கு எக்கச்சக்கமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். குறிப்பாக இதற்கு எக்கச்சக்கமான பெண்கள் ரசிகர்களாக இருந்து வருகின்றனர்.

சினிமாவில் சிம்புக்கு ரசிகர்களாக நிறைய பேர் உள்ளனர். குறிப்பாக சின்னத்திரை நடிகைகளில் பலர் சிம்புவை பின் தொடர்ந்து வருகின்றனர். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரீநிதி சிம்புவை காதலிக்கிறேன் அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்குவேன் என பேசி இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

பிறகு அவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வர சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிய வந்தது. ஸ்ரீநிதி தொடர்ந்து தற்போது இன்னொரு சீரியல் நடிகை 16 வருடமாக சிம்புவை காதலித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சாய் காயத்ரி. இவருடைய தங்கை பெயர் மதுரா. இவரும் சில சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் இவர் பள்ளியில் படிக்கும் போது சன் மியூசிக்கில் சிம்புவின் தம் படத்தில் இடம்பெறும் ஒரு பாடலை பார்த்தேன். அப்போதிலிருந்து இப்போது வரை கிட்டத்தட்ட 16 வருடங்களாக சிம்புவை ஒரு தலையாக காதலித்து வருகிறேன். அவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக ப்ரபோஸ் செய்து விடுவேன் என கூறியுள்ளார்.

ஸ்ரீநிதி பஞ்சாயத்து முடிந்த நிலையில் சின்னத்திரை நடிகை மதுரா சிம்புவை காதலிப்பதாக கிளப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.