தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள துப்பறிவாளன் பட நடிகை.
தமிழ் சினிமாவின் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன், வாய்தா உள்ளிட்ட சில படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்திருந்தவர் நடிகை தீபா என்கிற பவுலின்.
தற்போது 29 வயதாகும் இவர் விருகம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் காதல் தோல்வி காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இவரது தற்கொலை சம்பவம் அவரது குடும்பத்தார் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.