கரோனா எதிரொலி காரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு விவேக் பெரிய தொகை ஒன்றை கொடுத்துள்ளார்.
Actor Vivek Contribution to Government : கரோனா வைரஸ் தற்போது இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதிலும் தமிழகத்தில் கிடுகிடுவென பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.
இதனால் மக்கள், பிரபலங்கள் என பலரும் முதல்வரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விவேக்கும் இறந்து போன தன்னுடைய மகன் சாய் பிரசன்னா அறக்கட்டளை சார்பாக ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார்.
விவேக் 5 லட்சம் கொடுத்ததை பலரும் பாராட்டி அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.