உண்மை என்பது மயிலிறகு போல. அது மெதுவாகவே போகும். ஆனால், வதந்தி என்பது காட்டுத் தீ போல. அது கன்னா பின்னானு பரவும் சார். ஆமாங்க..’ விவாகரத்து’ வதந்திக்கு செம கிக்கா ஒரு முற்றுப்புள்ளி வெச்சிட்டாரு நடிகர் சூர்யா..! எப்டின்னா..

சூர்யா நடித்து, சிறுத்தை சிவா இயக்கிய ‘கங்குவா’ படம் நவம்பரில் உலக அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா 44 படத்தின் ஷூட்டிங் நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் மகிழ்ச்சியை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க சூர்யா மும்பை புறப்பட்டு சென்றுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து காணப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

முன்னதாக, இவர்கள் இருவருக்கும் விவாகரத்து நடக்க உள்ளதாகவும், இருவரும் பிரியவுள்ளதாகவும் அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், இந்த வதந்திகளுக்கு என்ட் கார்டு போடும் வகையில், சூர்யா-ஜோதிகா காதல் தம்பதியர் இருவரும், தற்போது மும்பை விமான நிலையத்தில் ஜோடியாக இணைந்து வந்தது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மிகவும் க்யூட்டான கெட்டப்பில் இவர்கள் இருவரும் அனைவரையும் கவரும் வகையில் இருந்தனர்.

மேலும், அடுத்தடுத்து படங்களில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சூர்யா கமிட்டாகி வருகிறார். இதனை தொடர்ந்து, வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்திலும், பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘கர்ணா’ படத்திலும் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, ஜோதிகாவும் அடுத்தடுத்த பாலிவுட் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும், குழந்தைகளின் படிப்பிற்காகவும் இவர்கள் மும்பையில் செட்டிலாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

‘இருக்கட்டும், அப்படியே ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமும் எடுத்து விட்டா, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்’ என்பதை சூர்யா-ஜோதிகா காதல் தம்பதியர் அறிவார்களோ.!

ஒன்றா.. இரண்டா.. எல்லாம் சொல்ல, ஓர் நாள் போதாது தான், உச்சி முதல் பாதம் வரை காதல் நிரம்பியிருந்தால்.! அப்டித்தானே ஜோசூ..?!