பிரபல சீரியலானா பாக்கியலட்சுமி தொடரில் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷிடம் ரசிகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கான பதிலை வீடியோ பதிவின் மூலம் வெளியிட்டுள்ளார் நடிகர் சதீஷ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் ஒன்றுதான் “பாக்கியலட்சுமி”. இந்த சீரியல் ரசிகர்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்த்து உள்ள நிலையில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நெருங்கியுள்ளது. அதாவது பாக்யாவிற்கு அனைத்து உண்மைகளும் தெரியவரும் சூழல் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கோபி என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கும் சதீஷிடம் ரசிகர் ஒருவர் மிகுந்த கோவத்துடன்  தனது ட்விட்டர் பக்கத்தில் “பிடிக்காத பாக்கியவுடன் எப்படி 3 குழந்தையை பெத்தீங்க” என்று கேள்வி கேட்டுள்ளார். அதற்கு ஒரு வீடியோ பதிவின் மூலம் கோபி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் சதீஷ் பதில் அளித்துள்ளார்.

அதாவது கோபிக்கு பாக்கியா உடன் திருமணம் ஆகும்பொழுது 23 வயசு. அந்த வயசுல ஒருத்தரோட  உடம்பு என்ன சொல்லும் அதற்கான தேவைகள், அதற்கான பசி அது உடம்பு சம்பந்தப்பட்டது. ஆனால் மனசு! 23 வயசுல உடம்பு பசியால் மூன்று குழந்தைகளை பெற்றிருக்கலாம், அப்படிதான் எனக்கு தோணுது ஆனால் கோபி மனசுல ராதிகாக்காக இருந்த காதல் 25 வருஷமா தூங்கிகிட்டு இருந்துச்சு மறுபடியும் அவளை தற்செயலா மீட் பண்ணும் போது 48 வயசுல என்ன ஆகும்னு நினைக்கிறீங்க.. பத்தி எரியும் என்று வீடியோ பதிவின் மூலம் பதில் அளித்திருக்கிறார்.