actor prasanna latest speech viral
actor prasanna latest speech viral

நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளதாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் பிரசன்னா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பிலும், குட் பேட் அக்லி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்தது குறித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார் அதில், இந்த முறை எங்கள் அன்பிற்குரிய தல அஜித் குமார் சாரின் படத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பது இறுதியாக உண்மை. மேலும் இது எனக்கு ஒரு கனவு. ஒவ்வொரு முறையும் ஏகே சாரின் படங்கள் அறிவிக்கப்படும் போதும் அதில் நானும் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறேன்.

ஆனால் இறுதியாக இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்கு கடவுளுக்கும் ஏகே சார், ஆதிக் ,சுரேஷ் சந்திரா சார் மைத்ரி மூவிஸ் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் எனக்கு சிலிர்ப்பாகவும், உற்சாகமாகவும் இருக்கிறது. என்னால் இப்போது அதிகம் வெளிப்படுத்த முடியவில்லை என்று உருக்கமாக வெளியிட்டுள்ளார்.

இவரின் இந்த பதிவு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.