நடிகர் நாசர் கலைஞர் போய் பேசி காண்பித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார்.

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் நாசர். இவர் இந்திய நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், டப்பிங் கலைஞர், பாடகர் மற்றும் அரசியல்வாதி ஆவார், அவர் முக்கியமாக தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் தொழில்களில் பணியாற்றுகிறார், அவர் சில மலையாளம், ஆங்கிலம் மற்றும் இந்தி திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். தற்போது இவர் நடிகர் சங்கத்தின் தலைவராகவும் இருந்தது வருகிறார்.

இந்த நிலையில் எந்த ஒரு கதாபாத்திரத்திலும் தனது நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து உள்ள இவர் அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் கலைஞர் கருணாநிதி போல் பேசி காண்பித்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார். மேலும் சில சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார்.

அதில் அவர், கலைஞர் எழுதும் வசனங்களை படங்களில் அப்படியே பேசும் விதி இருந்தது. அவரை தனியாக சந்தித்தபோது, எனக்குத் தோன்றும் சில வார்த்தைகளையும் சேர்த்துக் கொள்ளவா என்று கேட்டேன். அதற்கு அவர் “அதுக்கு என்னய்யா போடு யார் சொன்னது நான் சொன்னதை அப்படியே பேசணும்னு, சொன்ன கருத்து வரணும்” என கலைஞர் கூறியதாக அவரை போல் அசத்தலாக பேசி காண்பித்தார்.