நடிகர் அஜித் குமாரின் தந்தை மறைவிற்கு இரங்கல் தெரிவித்து நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

இந்திய திரை உலகில் உலக நாயகனாக வளம் வரும் நடிகர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்குமாரின் தந்தையின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பகிர்ந்திருக்கும் பதிவு வைரலாகி வருகிறது.

அதாவது, நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் கடந்த நான்கு வருடங்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித்திற்கு பதிவின் மூலம் கமல்ஹாசன் ஆறுதல் தெரிவித்திருக்கிறார்.

அதில் அவர், “தம்பி அஜித் குமார் அவர்களின் அப்பா திரு. சுப்பிரமணியம் மறைந்த செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து வாடும் அஜித் குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன். என்று பதிவிட்டு இருக்கிறார்.