ஹீரோயிசம், பட்ஜெட், பன்ஜிங் டயலாக், குத்துப்பாட்டு இவைகளால் மட்டும் ஒரு படம் வெற்றி பெறுவதில்லை என்பது தெரிந்ததே.
இருப்பினும், நடிகர் சூர்யா எடுத்த முடிவு மரியாதை நிமித்தமானது. நடிகர் ஜீவா எடுத்த முடிவு தொழில் சார்ந்த இயல்பானது. அதாவது நடந்த விஷயம் என்னன்னா..
இயக்குனர் டி.ஜே ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘வேட்டையன்’ வருகின்ற அக்டோபர் மாதம் 10ஆம் தேதி உலக அளவில் வெளியாகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக அமிதாப்பச்சன் இந்த திரைப்படத்தில் ‘வக்கீல்’ கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் “கூலி” திரைப்படத்தில் ரஜினி பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்பொழுது பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளார். சில நாட்களில் மீண்டும் தனது கூலி திரைப்பட பணிகளை துவங்க உள்ளார்.
முழுக்க முழுக்க கமர்சியல் ரீதியாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய ஸ்டைலில் ஒரு கிளாசிக் ரஜினிகாந்தை அவருடைய ரசிகர்களுக்கு விருந்தளிக்க உள்ளதாக, கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பு தகவலை வெளியிட்டு வருகின்றன.
இந்த சூழலில், ஏற்கனவே நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படமும், ‘வேட்டையன்’ திரைப்படமும் ஒரே நாளில் வெளியாக இருந்தது. ஆனால், மூத்த நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து மோதுவது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது என்று நடிகர் சூர்யா பொதுவெளியில் அறிவித்திருந்தார்.
அதாவது, சிறுவர்களாக இருந்தபோதே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர் அவர். 50 ஆண்டுகால அனுபவம் கொண்ட அவருடைய திரைப்படத்தோடு நமது திரைப்படம் மோதுவது முறையாக இருக்காது என்று கூறி ‘வேட்டையன்’ படம் வெளியாகும் அதே நாளில் ‘கங்குவா’ வெளியாகாது என்று கூறியிருந்தார். ஆனால், இந்த சூழலில் மற்றொரு திரைப்படம் ‘வேட்டையன்’ படத்திற்கு போட்டியாக களமிறங்கவுள்ளது. இது தொழில் சார்ந்த விஷயமாக இருக்கலாம்.
நடிகர் ஜீவா மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகிய இருவரும் இணைந்து நடித்துள்ள “பிளாக்” திரைப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 11-ம் தேதி ‘வேட்டையன்’ திரைப்படம் வெளியான அடுத்த நாளே திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதுவும், பெரிய எதிர்பார்ப்புகளையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
எது எப்படியோ.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது சினிமாவுக்கும் பொருந்தும் தானே.!