கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகர் பப்லு இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் அளித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரல்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் பப்லு என்கின்ற பிரித்விராஜ். தமிழ் ,தெலுங்கு மொழிகளில் பல வெற்றி படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான இவர் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணத்தால் ஆட்டிசம் பாதித்த தனது 25 வயதான மகனுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் 57 வயதை நிரம்பி இருக்கும் பப்லு மலேசியாவை சேர்ந்த 23 வயதான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

தற்போது இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் பப்லுவின் வீடியோ வெளியாகி உள்ளது. அதில் அவர், “நான் மலேசியா பெண்ணை கல்யாணம் பண்ணிட்டேன்னு வைரலாச்சு, ஆமாம் நான் பண்ண போறேன் ஆனா இப்போ இல்ல உங்க கிட்ட சொல்லிட்டு தான் பண்ணுவேன், திருட்டுத்தனமாக எதுவும் செய்ய மாட்டேன்” என்று அதிரடியான விளக்கத்தை கொடுத்திருக்கிறார். இதுவும் தற்போது வைரலாகி வருகிறது.