மாரடைப்பால் பிரபல தமிழ் நடிகர் காலமாகி உள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் அருள்மணி. இவர் தமிழில் அழகி, தென்றல், தாண்டவகோனே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்.
இந்த படங்களில் தனது திறமையால் ரசிகர்களை கவர்ந்த இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து இவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை நல்லடக்கம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த ஏற்படும் இழப்புகள் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.