புஷ்பா 3 படம் தொடங்குவது எப்போது? அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ரவிசங்கர்..!

புஷ்பா 3 படம் எப்போது தொடங்குகிறது என்பதை குறித்து அப்டேட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரவிசங்கர்.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அல்லு அர்ஜுன். இவரது நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் கொடுத்து கலெக்ஷனை அள்ளிய திரைப்படம் புஷ்பா.
இந்தப் படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததை தொடர்ந்து கடந்த வருடம் 2024 ஆம் ஆண்டு புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
புஷ்பா 3 உருவாகுமா? என்று ரசிகர்கள் மனதில் இருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார் மைத்ரி மூவி மேக்கர் தயாரிப்பாளர் ரவிசங்கர். அதாவது புஷ்பா 3 படத்திற்கான பணிகள் வருகிற 2028 இல் தொடங்கும் என தெரிவித்துள்ளார். இதனால் புஷ்பா 3 திரைப்படம் உருவாவதில் ஒரு சந்தேகமும் இல்லை. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
