4th Test India vs Australia – இன்று சிடினியில் நடைபெற்ற 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 4 விக்கெட் இழபிபிர்க்கு 303 ரன்கள் எடுத்து உள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்ட முடிவில், இந்தியா 303 ரன்கள் எடுத்துள்ளது.
இதுவரை நடந்து முடிந்த 3 டெஸ்ட் போட்டியில் இந்தியா 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
ஆஸ்., மண்ணில் 70 ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை வென்றது இல்லை என்ற அவப்பெயரை நீக்கி வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை இந்தியா நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று காலை தொடங்கிய இறுதி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டியில் இந்தியா பேட்டிங் தேர்வு செய்து தனது இன்னிங்சை தொடங்கியது.
இந்திய அணியில் சிறிது மாற்றத்துடன் களமிறங்கியது. ராகுல் இந்த போட்டியில் மீண்டும் சேர்க்கப்பட்டு உள்ளார்.
நாளைய தொடர் ஆட்டத்தில் ஆஸ்வின் சேர்க்கபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாஸ் வென்று ராகுல் மற்றும் மயங்க் தொடக்க வீரர்களாக களமிரகினார்கள்.
ராகுல் பெரிதாக எதிர்பாரக்கப்பட்ட நிலையில் அவர் வழக்கம் போல 9 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஆனால், மயங்க் நிதானமாக விளையாடி 77 ரன்கள் எடுத்தார். அடுத்ததாக களமிறங்கிய புஜாரா 130 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
இவரை தொடர்ந்து கோலி களமிரகினார். அவரும் பெரிதாக ரன் எடுக்காமல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அடுத்து களமிறங்கிய ரஹானே, 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இன்றைய ஆட்ட இறுதியாக ஹனுமா 39 ரன்களில் களத்தில் உள்ளார். நாளைய ஆட்டத்தில் ஹனுமா மற்றும் புஜாரா தொடங்குவார்கள்.