நான்கு நாளில் வசூல் சாதனை படைத்துள்ளது அயலான் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் அயலான்.
நேற்று இன்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக குழந்தைகள் பலரின் இந்த படத்தை என்ஜாய் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது திரைப்படம் உலக முழுவதும் நான்கு நாளில் ரூபாய் 50 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.