மூன்று வாரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் தமிழக வசூல் குறித்த நிலவரம் தெரிய வந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் அவர்களின் இயக்கத்தில் அவரது கனவு படமான பொன்னியின் செல்வன் கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீசானது. இந்த படம் வெளியான மூன்று வரமும் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் கன்னடம் என மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியான இந்த படம் உலகம் முழுவதும் 500 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளது.

இந்த நிலையில் படம் வெளியான மூன்று வாரத்தில் தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை பெற்றிருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

தமிழ் சினிமாவிலேயே அதிகம் வசூல் செய்த திரைப்படமாக பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.