தளபதி விஜய்க்கு மூன்று நாயகிகள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தின் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் இருந்து விசில் போடு என்ற ஃபர்ஸ்ட் சிங்கிள் ட்ராக் நேற்று வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. 

இந்த படத்தை தொடர்ந்து இதை அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் இந்த படத்தில் மூன்று நடிகைகள் நாயகியாக நடிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. 

விஜயுடன் பல்வேறு படங்களில் ஜோடி சேர்ந்து நடித்த திரிஷா இந்த படத்தில் மீண்டும் ஜோடி சேர இருப்பதாக சொல்லப்படுகிறது. அது மட்டுமல்ல கத்தி தெறி படத்தின் நாயகியாக நடித்த சமந்தாவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இவர்களைத் தொடர்ந்து சீதாராமன் படத்தில் நாயகியாக நடித்த மிருணாள் தாகூர் மூன்றாவது மனைவியாக நடிக்கலாம் என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் இந்த படத்தில் மூன்று வேடங்களில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.