திரை உலகில், இரண்டு கதாநாயகர்கள் இணைந்து நடிப்பது புதிதல்ல. கதைக்களத்திற்கு மிகவும் அவசியமென்றால், ஆறு கதாநாயகர்கள் கூட இணையலாம். அவ்வகையில், புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதர்வா கைகோர்த்திருக்கிறார். அது குறித்து பார்ப்போம்.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் “மெரினா” என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக தமிழ் திரையில் அறிமுகமானார் சிவகார்த்திகேயன். அதன் பிறகு, ஒரு சில திரைப்படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்து, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருக்கிறார்.

இநிலையில், வருகின்ற 31ஆம் தேதி அவருடைய நடிப்பில் “அமரன்” என்கின்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் சாய் பல்லவி அவருடைய மனைவியாக நடித்திருக்கிறார்.

மேஜர் முகுந்தன் என்பவருடைய வாழ்க்கை வரலாறை தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. “ரங்கூன்” என்ற திரைப்படத்தை இயக்கி புகழ்பெற்ற இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

மேலும், முதல் முறையாக பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். கடந்த 2020ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” திரைப்படத்தை இயக்கிய பிறகு, சுமார் நான்கு ஆண்டுகள் கழித்து மீண்டும் இயக்குனராக களமிறங்குகிறார் ஏ.ஆர் முருகதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் இயக்குனர் சுதா கொங்காராவுடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இணைய உள்ளதாக தகவல்கள் அண்மையில் வெளியானது. அதாவது, ஏற்கனவே பிரபல நடிகர் சூர்யாவை வைத்து “சூரரை போற்று” என்ற மாபெரும் வெற்றித் திரைப்படத்தை கொடுத்த சுதா கொங்கரா, “புறநானூறு” என்கின்ற திரைப்படத்தை மீண்டும் சூர்யாவை வைத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்த சூழலில் அப்பிடத்திலிருந்து சூர்யா விலகிய நிலையில், தற்போது அப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே இது குறித்த அதிகார பூர்வ தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், முதல் முறையாக பிரபல தெலுங்கு திரைப்பட நடிகை ஸ்ரீ லீலா இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும், மேலும் அவருடைய சகோதரராக நடிகர் முரளியின் மகன் அதர்வா முரளி நடிக்க அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. முதலில் அதர்வா கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

லோகேஷுக்கு, சிவாவுடன் இணைந்து நடித்து சம்பளம் பெறுவதை விட, தனக்கு ‘ கூலி’ தான் முக்கியம் என எண்ணி விட்டார் போலும்.!