ஈஸ்வர், மஹாலக்ஷ்மியின் விவகாரம் இதுவரை முடிவுக்கு வராததால் டிவி சேனல் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன் சீரியலில் இணைந்து நடித்து வருபவர்கள் ஈஸ்வர், மஹாலக்ஷ்மி.
இவர்கள் இருவருக்கும் இடையே கள்ள தொடர்பு இருப்பதாகவும் அதனால் தன்னிடம் விவாகரத்து கேட்டு அடித்து உடைத்து கொடுமைப்படுத்துவதாகவும் சீரியல் நடிகையும் ஈஸ்வரின் மனைவியுமான ஜெயஸ்ரீ குற்றம் சாட்டி வருகிறார்.
இதனையடுத்து இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் அதிருப்தியில் இருக்கும் டிவி சேனல் விரைவில் இந்த நிகழ்ச்சியை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.