Zee Anchor : ஜீ குடும்ப தொகுப்பாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் உள்ள பிரபல டிவி நெட்ஒர்க் ஒன்று ஜீ தமிழ். ராஜஸ்தானை சேர்ந்த ஜீ டிவி சேனலில் பிரபல தொகுப்பாளியாக பணியாற்றி வந்தவர் ராதிகா கௌசிக்.
இவர் நேற்று (வெள்ளி கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் 4-வது அடுக்கு மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து அடுக்குமாடி காவலர்கள் போலீசுக்கு போன் செய்து இது குறித்து தெரிவித்துள்ளனர். இந்த குடியிருப்பில் ராதிகாவுடன் சேர்ந்து வசித்து வந்துள்ளார் நண்பரும் தொகுப்பாளருமான ராகுல்.
ராதிகா தற்கொலை செய்து கொண்ட நாளில் ராகுலிடையே வாக்கு வாதம் நடைப்பெற்றுள்ளது. அதன் பின்னர் ராகுல் பாத்ரூம் சென்றிருந்த நேரத்தில் ராதிகா இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனால் போலீசார் வழக்கு பதிவு செய்து ராகுல் என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.