Yuvraj Singh announces Rest :
இந்திய அணி 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரை வென்றதில் முக்கிய பங்காற்றியவர் யுவராஜ் சிங்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களில் சிறந்தவர் எனப் பலராலும் போற்றப்பட்டவர். சில ஆண்டுகளாக அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வந்த இப்போது ஓய்வுபெறும் முடிவை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஓய்வு சம்மந்தமாக இப்போது அவர் பிசிசிஐ உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
பிரபல கிரிக்கெட் வீரரின் 2 வயது மகள் மரணம் – அதிர்ச்சி தகவல்.!
மேலும் பிசிசிஐ ஒப்புதலுடன் வெளிநாடுகளில் நடக்கும் டி20 போட்டிகள் மற்றும் கவுண்ட்டி போட்டிகளில் விளையாட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐபிஎல் தொடரில் இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடிய யுவராஜ் சிங் முதல் 4 ஆட்டங்களில் மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தகக்து.
தற்போது 37 வயதாகும் யுவராஜ் சிங் இனி இந்திய அணியில் இடம்பிடிப்பது முடியாத காரணம் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும் எனத் தெரிகிறது.
இருந்தும் யுவராஜ்சிங் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டம் வைத்து உள்ளார். அவர்கள் யுவி அணியில் இருந்தாலும் சரி இல்லை என்றாலும் சரி அந்த ரசிகர் கூட்டம் குறைய போவது இல்லை ரசிகர்களின் பாசம் மாற போவது இல்லை என்பதே உண்மை.